“தமிழகம் தயாராக உள்ளது” – விஜய்யின் பாதுகாவலரின் பதிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தீவிர பிரசாரம் நேற்று நிறைவடைந்த நிலையில், அவரது தனிப்பட்ட பாதுகாவலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான பதிவு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் பிரசாரக் களத்தில் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு வியந்து, அவரது பாதுகாவலர் இந்தச் செய்தியை தமது முகப்புத்தகத்தில் (Facebook) பகிர்ந்துள்ளார்.

“இன்று அண்ணாவைப் பிடிப்பது… நாளை அவர் தமிழக மக்களின் இதயங்களைப் பிடிக்கப் போவது போல உணர்கிறேன். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு, தடைகளைத் தாண்டி, நேராக மக்களுடன் இணையும் ஒரு தலைவர் இவர். ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், அன்பு உண்மையானது, அந்தப் பிணைப்பு வலிமையானது. எதிர்காலம் எழுச்சி பெறுகிறது. தமிழகம் தயாராக உள்ளது.” என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், விஜய்யின் வெற்றி வாய்ப்பு குறித்து அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்தே இத்தகைய தன்னம்பிக்கை மிக்க பதிவு வெளியாகியிருப்பது த.வெ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்தப் பதிவு விஜய்யின் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருவதுடன், “தமிழகம் தயாராக உள்ளது” (Tamil Nadu is Ready) என்ற வாசகமும் ட்ரெண்டாகி வருகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*