WPZOOM
 
WPZOOM
 

Other News

தமிழகத்தை ஆளப்போவது யார்? நாளை தேர்தல்!

ஜனநாயகத் திருவிழாவாகக் கருதப்படும் தேர்தல், தமிழகத்தில் நாளை (23) நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு ஆரம்பமாகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்து, தற்போது அமைதி காலம் அமுலில் உள்ளது. தமிழகத்தில் இம்முறை நான்கு முனை போட்டி நிலவுகின்றது.

“தமிழகம் தயாராக உள்ளது” – விஜய்யின் பாதுகாவலரின் பதிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தீவிர பிரசாரம் நேற்று நிறைவடைந்த நிலையில், அவரது தனிப்பட்ட பாதுகாவலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள உணர்ச்சிகரமான பதிவு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய்யின் அரசியல் வருகை மற்றும் பிரசாரக் களத்தில் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆதரவைக் கண்டு வியந்து, அவரது பாதுகாவலர் இந்தச் செய்தியை தமது முகப்புத்தகத்தில் (Facebook) பகிர்ந்துள்ளார். “இன்று அண்ணாவைப் பிடிப்பது… நாளை அவர் தமிழக மக்களின் இதயங்களைப் […]

ஏவுகணை ஏவுதளங்ளை அதிக வேகத்தில் புதுப்பிக்கும் ஈரான்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு முன்பு இருந்ததை விட, ஈரான் இப்போது தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்களை அதிக வேகத்தில் புதுப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புரட்சிகரக் காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி மஜித் மூசாவி (Majid Mousavi) இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நிலத்தடி ஏவுகணைத் தளத்தை அவர் ஆய்வு செய்யும் காணொளியுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. போர்நிறுத்தத்தின் போது எதிரிகளால் தங்களது ஆயுதங்களை மீண்டும் உருவாக்க […]

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் – ட்ரம்ப் மிரட்டல்!

ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், பாலத்தையும் தகர்த்தெறிவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்துள்ளது எனக் கூறிய அவர், இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முழுமையான மீறலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரான் ஒரு பிரெஞ்சு கப்பல் மற்றும் ஒரு இங்கிலாந்து சரக்குக் கப்பல் […]

விஜயை மறைமுகமாக விமர்சித்த பிரகாஷ்ராஜ்

தமிழகத்தில் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் செயற்பாடுகள் மற்றும் அதன் தலைவர் விஜயின் பிரசார முறையை நடிகர் பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்சித்துள்ளார். கட்சி வேட்பாளர்களை அறிவித்தும் அவர்களுக்கு ஆதரவாக, ஒவ்வொரு தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் சிபிஐ(எம்) வேட்பாளர் என்.பாண்டியின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய போது பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாவது, “ஒரு திரைப்படத்தில் நீங்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ […]

நடிகர் விஜய் – சங்கீதா பரஸ்பர விவாகரத்து? – சென்னையில் வழக்கறிஞர்கள் தீவிர பேச்சுவார்த்தை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கு (Mutual Consent) விஜய் தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. நேற்று நடைபெற்ற […]

ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு!

ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வான்பரப்பு திறக்கப்படுவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு […]

இலங்கையில் எரிபொருள் விலை குறையுமா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில், போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்காகத் திறந்து விடப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகப் பொருளாதாரம் சற்று நிம்மதி அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு பீப்பாய் ப்ரெண்ட் மசகு எண்ணெய் 98 டொலராக இருந்த நிலையில், ஈரானின் அறிவிப்பிற்குப் பிறகு அது 88 டொலராகக் குறைந்தது. பின்னர் மீண்டும் 92 டொலர் வரை உயர்ந்தது. போர் […]

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வருகிறது QR முறை!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, இன்று(18) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது. அதன்பின்னர் QR குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 11ஆம் திகதி முதல் இன்று(18) நள்ளிரவு வரை QR குறியீடு இல்லாமல் பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. இருப்பினும், இந்த QR சலுகை டீசல் வாகனங்களுக்கு […]

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் ஒருபோதும் மூடப்போவதில்லை என ஈரான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக ஊடகப் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் பதிவு ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், ஹோர்முஸ் நீரிணையை இனிவரும் காலங்களில் உலக நாடுகளுக்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் போவதில்லை என ஈரான் வாக்குறுதி அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி […]