WPZOOM
 
WPZOOM
 

Other News

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவினாலும் மின்சாரம், எரிபொருள் விநியோகம் இலங்கையில் தடையின்றி நடக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார். களுத்துறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. […]

திடீர் சுகயீனத்தால் பிள்ளையான் சிறைச்சாலை வைத்தியசாலையில்…

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் எனவும், தற்போது அவர் அங்குள்ள மருத்துவர்களின் விசேட கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் […]

எரிபொருள் பற்றாக்குறை – முடங்கும் விமானப் பயணங்கள்!

லுஃப்தான்சா நிறுவனம் ஏராளமான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், நைஜீரிய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளன. ஈரான் போரின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகம் குறைந்து வருவது மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து அரசாங்கங்களும் விமான நிறுவனங்களும் மிகுந்த அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்ற நிலையில் இவ் எச்சரிக்கை வந்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சில வாரங்களுக்குள் எரிபொருள் பற்றாக்குறை […]

லெபனானில் போர் நிறுத்தம்: ஈரான் வரவேற்பு!

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ளது. எனினும், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த முயற்சி இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அவநம்பிக்கை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம், ஏவுகணை சோதனைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை […]

“அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென […]

ஹோர்முஸ் ஜலசந்தியை மீளத் திறக்க ஒன்றுக்கூடும் 40 நாடுகள்!

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து விவாதிப்பதற்காக, பாரிஸில் உலக தலைவர்கள் ஒன்றுக்கூடவுள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டமார் தலைமை தாங்கவுள்ளார். சுமார் 40 நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்பு பங்கேற்கும் இந்தக் கூட்டம், அமெரிக்க-ஈரானிய போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதிலும், ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையைத் திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தும். இதன்போது ஜலசந்தியை நிபந்தனையின்றி […]

மீண்டும் வருகிறது QR முறை! தற்காலிக விலக்கு நிறைவு!

பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

லெபனான் போர்நிறுத்தத்தில் ஹிஸ்புல்லாவும் உள்ளடக்கம் – ட்ரம்ப்

லெபனானின் போர்நிறுத்தத்தில் ஹிஸ்புல்லாவும் இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேல் பிரதமர் மற்றும் லெபனான் ஜனாதிபதியை சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் எப்போது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஜனநாயகன் திரைப்படக் கசிவு – சந்தேக நபர்கள் மூவர் கைது

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் கசிந்த விவகாரம் தொடர்பாக, மூன்று முக்கிய சந்தேகநபர்களை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டிஜிட்டல் தடயங்கள் மற்றும் தீவிர விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறொரு திரைப்படத்தின் காணொளி செம்மைப்படுத்துனராக பணியாற்றும் ஒருவர், ‘ஜனநாயகன்’ படத்தின் படத்தொகுப்புபணிகள் நடைபெற்ற கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து படத்தை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் […]

இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்: ட்ரம்ப்

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் நடத்திய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக போர்நிறுத்தம் கிழக்கு நேரப்படி (EST) இன்று மாலை 5 மணி முதல் அமுலுக்கு […]