ஈரான் போரில் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீட்டிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பான நிகழ்வுகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் முன்னேற்றம் பங்குச் சந்தையில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Other News
பெரம்பூரில் கோலம் போட்டு வாக்கு சேகரித்த விஜய்…
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் கோலம்போட்டு வீடுகளில் வாக்கு சேகரித்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டார். தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இணையத்தில் கசிந்த “ஜெயிலர்- 2”
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல திரைப்பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெயிலர்-2’ படத்தின் காட்சிகளும் சமூக வலை தளங்களில் கசிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சிகள் […]
தற்காலிக முடிவுகளுக்கு இடமில்லை – ஈரான்
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு எவ்விதமான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதற்கு ஈரான் தயாரில்லை என அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சயீத் காதிப்சாதே (Saeed Khatibzadeh) தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெற்ற ‘அந்தால்யா இராஜதந்திர மாநாட்டில்’ (Antalya Diplomacy Forum) கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார். போர்நிறுத்தம் என்பது லெபனான் முதல் செங்கடல் வரை நிலவும் அனைத்து மோதல் பிராந்தியங்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான உடன்படிக்கையாக […]
ரணிலின் அனுபவத்தைப் புறக்கணித்தால் இலங்கை மீண்டும் காலனித்துவமாகும்! – வஜிர அபேவர்த்தன
வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, நீண்டகால அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் எனவும், நாட்டு மக்கள் அவரது ஆலோசனைகளையும் பிரயோசனங்களையும் பெற்றுக்கொள்ளத் தவறினால் நாடு மீண்டும் காலனித்துவ நிலைக்குத் தள்ளப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் […]
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவினாலும் மின்சாரம், எரிபொருள் விநியோகம் இலங்கையில் தடையின்றி நடக்கும் – நளிந்த ஜயதிஸ்ஸ
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்தார். களுத்துறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “உலக சந்தையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. […]
திடீர் சுகயீனத்தால் பிள்ளையான் சிறைச்சாலை வைத்தியசாலையில்…
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் எனவும், தற்போது அவர் அங்குள்ள மருத்துவர்களின் விசேட கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் […]
எரிபொருள் பற்றாக்குறை – முடங்கும் விமானப் பயணங்கள்!
லுஃப்தான்சா நிறுவனம் ஏராளமான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், நைஜீரிய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளன. ஈரான் போரின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகம் குறைந்து வருவது மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து அரசாங்கங்களும் விமான நிறுவனங்களும் மிகுந்த அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்ற நிலையில் இவ் எச்சரிக்கை வந்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சில வாரங்களுக்குள் எரிபொருள் பற்றாக்குறை […]
லெபனானில் போர் நிறுத்தம்: ஈரான் வரவேற்பு!
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தத்தை ஈரான் வரவேற்றுள்ளது. எனினும், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த முயற்சி இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அவநம்பிக்கை காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம், ஏவுகணை சோதனைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றமை […]
“அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்
“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப் பேச்சு சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென […]





